விதிமீறி வழங்கப்பட்ட பதவி உயர்வு: ஆசிரியர்கள் போராட்டம்

           திண்டுக்கல் வடமதுரையில் விதிகளை மீறி, ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதாக, தொடக்க கல்வி அலுவலரைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கல்வி அலுவலருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு, விதிமுறைகளை மீறி செய்யப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்து எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்தார். அதன்பின்னரே போராட்டம் கைவிடப்பட்டது.
 -இணைய செய்தியாளர்-தேனி ராஜா