பொட்டு சுரேஷ் படுகொலை 7 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.



      மதுரையில் திமுக செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,7 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
    திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் சபாரத்தினம், சந்தானம், ராஜூ, லிங்கம், செந்தில், சேகர், கார்த்திக், என்கிற 7 பேர் சரணடைந்துள்ளனர். சரணடைந்துள்ள 7 பேரும் மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
    முன்னதாக திமுக செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் மதுரையில் கடந்த வியாழன் அன்று படுகொலை செய்யப்பட்டார். அவரது கைப்பேசிக்கு வந்த அழைப்புகளை மையமாக வைத்து, குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

                                                     -பசுமை நாயகன்