பழனியில் நிறுத்தப்படும் ரோப் கார் சேவையால் பக்தர்கள் அவதி


பழனி முருகன் கோவிலில் ரோப் கார் எனப்படும் கம்பி வட சேவை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீர் திடீரென நிறுத்தப்படுவதால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கம்பி வட ஊர்தி சேவை பாதிப்பு:
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களில், வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக கடந்த 2004ம் ஆண்டு கம்பி வட ஊர்தி சேவை துவக்கப்பட்டது. இந்த சேவை மூலம் மலை அடிவாரத்தில் இருந்து 2 நிமிடத்திற்குள் கோவிலுக்கு செல்ல முடியும். ஒரு மணி நேரத்தில் சுமார் 250 பேர் இந்த சேவையால் பயனடைந்து வந்தனர்.
இந்த கம்பி வட ஊர்தியில் தினமும் ஒரு மணி நேரம் தேவையான பராமரிப்பு பணியை மேறகொள்வதோடு, வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாதம் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.ஒரு மாதம் கம்பி வட ஊர்தி சேவை நிறுத்தப்பட்டு மீண்டும் சேவை துவங்கிய இருபது நாட்களில் கம்பி வட சேவையில் பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
"பாதிப்பிற்குள்ளாகும் முதியவர்கள்":
கம்பி வட சேவை ரத்து செய்யப்படும் நேரத்தில், பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் வயதான மற்றும் உடல் ஊனமுற்ற பக்தர்கள் இழுவை ரயில் சேவைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது . மூன்றில் இரண்டு இழுவை ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால், பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
"விரைவில் நிரந்தர தீர்வு":
அடிக்கடி பழுதாகும் கம்பி வட சேவை பற்றி பழனி முருகன் கோயில் இணை ஆணையர் பாஸ்கரனை தொடர்பு கொண்டு கேட்ட போது பதில் அளிக்க மறுத்துவிட்டார். பொறியாளர் நாச்சிமுத்துவிடம் விசாரித்தபோது, விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவே, சிறிய பழுது ஏற்பட்டாலும் சேவை நிறுத்தப்பட்டு பழுதுநீக்கப்படுவதாக விளக்கம் அளித்தார். கம்பி வட ஊர்தியில் பராமரிப்பு பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவன மேலாளர் மூர்த்தி, இன்னும் ஓரிரு நாட்களில் பணி நிறைவடைந்து சேவை துவக்கப்படும் என்று தெரிவித்தார்
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களில், வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக கடந்த 2004-ம் ஆண்டு கம்பி வட ஊர்தி சேவை துவக்கப்பட்டது. இந்த சேவை மூலம் மலை அடிவாரத்தில் இருந்து 2 நிமிடத்திற்குள் கோவிலுக்கு செல்ல முடியும். ஒரு மணி நேரத்தில் சுமார் 250 பேர் இந்த சேவையால் பயனடைந்து வந்தனர்.
இந்த கம்பி வட ஊர்தியில் தினமும் ஒரு மணி நேரம் தேவையான பராமரிப்பு பணியை மேறகொள்வதோடு, வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாதம் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.ஒரு மாதம் கம்பி வட ஊர்தி சேவை நிறுத்தப்பட்டு மீண்டும் சேவை துவங்கிய இருபது நாட்களில் கம்பி வட சேவையில் பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
                                        -இணைய செய்தியாளர்-தேனி ராஜா