திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த ஏ.வி.பட்டி கிராமத்தில் கிணற்றுக்குள் தவறிவிழுந்து 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, வடமதுரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதியில் மழை இல்லாததால், கிணறை ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, 8 பேர் அந்த கிணற்றில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக, கயிறு அறுந்து கீழே விழுந்தது. இதில், கிணற்றில் வேலை செய்த ஆலப்பன் உயிரிழந்தார். அப்போது, அந்த கயற்று கட்டப்பட்ட தட்டில் அமர்ந்து மேல வந்த சீலமநாயக்கர் என்பவரும் பலியானார்.
-இணைய செய்தியாளர்-தேனி ராஜா