பேரூராட்சி அலுவலகம் முற்றுகை..! பெண்கள் போராட்டம்..!

           பேரூராட்சி அலுவலகம் முற்றுகை : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, ஆயக்குடி பேரூராட்சி செயல் அலுவலரைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடத்துடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடந்த 10 நாட்களாக ஆயக்குடி பேரூராட்சிப் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி வட்டாச்சியர், பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தை பெண்கள் கைவிட்டனர்.     
 -தேனி முருகேஸ்