திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடியில் உயர் மின் அழுத்தம் காரணமாக 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன.
சீலப்பாடி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து
வருகின்றன. இன்று அதிகாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் வந்த போது
உயர்மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் இருந்த டி.வி, மின்விசிறி போன்ற பல
மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன.
இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் பலமுறை மின்வாரியத்திற்கு தகவல்
கொடுத்தும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.
-இணைய செய்தியாளர்-தேனி ராஜா